பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

சாதனை விருது

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-41
07-11-2024

சாதனை விருது

பாமுகம் எனும் தளத்தினிலே
பல முகத்தை இணைத்ததிலே
தாய் மொழியை தக்க வைக்க
தன்னால் இயன்றதை நாட்டி வந்தார்.

நட்டமரம் பல கிளைவிட்டன
நாட்டமற்றவை அறியாமையே
விட்ட இடத்தில் எமை செதுக்கி
வீரியம் தந்த ஆசானே!

உயரிய பண்பு துணைவிக்கும் இங்கே
ஊக்கம் கொடுப்பது இவரது நோக்கமும்
புலர்பெயர் நாட்டில் தமிழ்பேச்சு சாதனை
புரிந்தது சாதனைக்கு மேலிங்கு தாங்கள்.

கனவுகள் யாவும் கல்வெட்டாகி
காண வேண்டும் சரித்திரம் இங்கே
உயரிய உங்கள் நோக்கமிங்கே
உலகிற்கு தெரியட்டும் அருமை என்று!

உண்மையை உரைத்து வாழ்த்துகின்றோம்
உங்கள் பாமுகத்தில் எம்முகமும் என்று
உயர உயர வாழ்த்துகின்றோம்
வாழிய வாழிய வாழியவே..

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading