சிவரூபன் சர்வேஸ்வரி

பெற்றவரே உலகமாதா
பேர் விளங்க வைக்கும் குலமாதா
கற்றவரும், நற்றவரும், மற்றவரும்
போடற்றி நிற்க
கருவறையில் நமைச்சு சுமந்து
கருணை மாதா

அமுத முலை தான்னூட்டி
அன்புடன் சீராட்டி
அறப்மோங்க நடைபயில
பெற்றவரே வழிகாட்டி
கல்வியெனும் படகேறி
காலமதில் வென்று வர
கடமையுடன் விழித்து நிற்கும்
பெற்றவரே தெய்வமப்பா

சான்றோராய் நாம் மிளிர -அவர்
சகிப்பது எத்தனையோ
சோதனைகள் பல கோடி சுமந்து நின்று
நம்மை சாதிக்க வைப்பதற்கு
தம் வேதனையை தாம் மறந்து

வெற்றி நடை தான் போட்டு தட்டியெமைக் கொடுப்பார்
வட்டில் சோறு தான் மறப்பார்
வாரி அமைத்தான் அனைத்து முத்த மழை பொழியும்,
பெற்றவரே தெய்வம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading