பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

போரில்லா நல்லுலகம் வேண்டும்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

காணும் இன்பம் கனிந்திடும் எண்ணம் காசினியில் நிலவிடவும் //

வேணும் எங்கள் வேதனைகள் தீர்க்கும் தீதறியாத உலகமும் //

சூழும்கலிகள் சூழ்ச்சிகள் எல்லாம் மாறிடவும் வேண்டும் //

மனங்கள் குளிர்ந்து மானிலம் சிறந்து நடைபயில்வதுவும் நன்றே //

வேறுபட்ட எண்ணங்களாலே போர்தொடுத்து வெந்துமடிதல் வேண்டாம் //

உண்டு மகிழ்ந்து உலாவியும் வரவே தங்குதடைகள் உடையட்டுமே எங்கும் //

பொங்கும் மனதில் புதுமைகள் துள்ளவும் நின்றே நிலவுதல் தோற்றம்//

வஞ்சனை கொண்டு வீழ்த்தியும் விடாது இரங்கியும் காத்திடுவாயே //

ஏழைகள் என்று ஏளனம் செய்து வதைத்தலும் ஆகாது பாராய் //

கடுங்கோபம் கொண்டே கத்திகள் எடுத்து உயிரையும் வதைக்காதே //

இயற்கையின் படைப்பில் துரோகமில்லை இடர்களை விதைக்காதே //

வழுவாத குணமும் வாய்மையின் சிறப்பும்
வரமாகக் கொண்டுவிடு //

நஞ்சுவைத்துப் பழகும் மக்கள் மனங்களும் மாறிவிட்டால் //

அஞ்சியும் நடக்கத் தேவையும் இல்லை அகிலமும் பேரொளியே //

துஞ்சிநீயும் துவண்டிட வேண்டாம் எங்கள் மண்ணிதுவே //
போரில்லா உலகம் மாறியே வந்தால் என்றும் புதுமைதானே //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan