சிவா சிவதர்சன்

[ வாரம் 219 ]
“ஆற்றல்”

வெள்ளம் பள்ளத்தையே நாடிப் பாயுமாற்றல்
உள்ளம் உணரா உழவனுக்கேது விளைச்சல்?
ஆற்றல் இல்லார்க்கு ஆழுமையோ பஞ்சம்
ஆனானப்பட்டவர் அறியார் ஆற்றலின் அம்சம்.

எண்ணையில் நீந்தும் நாடுகளுக்கோ நீர்ப்பஞ்சம்
வெள்ளத்தில் தவிக்கும் நாடுகளோ எண்ணைக்கு தஞ்சம்
கடலினில் கரையும் நீரால் தாயகத்தில் அவலம்
ஆற்றலாம் பண்டமாற்று நம்துயரம் நீங்கும்

ஆற்றல்மிக்க தமிழன் இன்று இயற்கையை விட்டான்
போற்றல் போயின்று தூற்றலில் திகழ்கின்றாய்
உலகிற்கே உணவளித்த உன்னாற்றல் தேடி
அலைகின்றாயா என் நாளும் இறைபாதம் நாடி?

நன்றி வணக்கம்.
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading