11
May
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது...
08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி
தமிழ்த்தாய் வணக்கம்
“””””””””””””””””””
தமிழவள் தமிழரில்
தங்கிடும் உயிரவள்
தமிழனை தகைவுறத்
தழைத்திடச் செய்பவள்
தகித்திடும் நெருப்பினும்
தகதகத் திருப்பவள்
அகிலமே அவளது
அழகினில் மயங்கிடும்
பிழைத்திடும் வழக்கினைப்
பிறப்பிலே அழிப்பவள்
அழைத்திடும் அடியவர்
அருகினில் தவழ்பவள்
முதல்மொழி அவளென
முடிபுனை தகைமையள்
இதமுற தரணியில்
இயங்கிடும் இனியவள்
பதமலர் பணிந்திடப்
பரவசம் அடைபவள்
நிதமெனை அணைப்பவள்
நிழலென தொடர்பவள்
தலைநிமிர் தமிழனாய்
தரத்தினை அருள்பவள்
நிலைபெறு அழகினால்
நிலவிடும் அமுதவள்
களம்பல படைத்திடும்
கவிகளின் குலமகள்
பழம்பல பனுவலில்
பரவிடும் பசுமையள்
அணிகளை அணிந்துமே
அவனியில் உலவிட
அனைவரும் அடிபணிந்
தவளடி தொழுவமே!

Author: Nada Mohan
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...