தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

ஜமுனாமலர் இந்திரகுமார்

பச்சைக் குவளை
கதிரவன் ஒளியால் பச்சையம் பெறுவாள்
மழையின் துளியால்
துளித்துச் சிரிப்பாள்
பனியின் பொழிவில்
பூத்துச் சிரிப்பாள்
குளிரின் கொடுமையில்
மரத்து நிற்பாள்
இலை உதிர்காலம்
பழுத்தே விழுவாள்
கள்ளை ஏந்த
பிளாவாய் மடிவாள்
பந்தியில் குந்த
தலை விரிப்பாள்
பீப்பி ஊத
குழாய்ச் சுருள்வாள்
கோவில் விழாவில்
தொங்கி நிற்பாள்
இட்டலிச் சட்டியில்
வட்டமாய் இருப்பாள்
வீட்டு வேலியை
பின்னலால் மறைப்பாள்
பொங்கல் பானையில்
இடையாய் இருப்பாள்
பூரண கும்பத்தில்
மங்களமாய் இதழ் விரிப்பாள்

ஜமுனாமலர் இந்திரகுமார்

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading