தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

தலைப்பு

இற்றை வரைக்கும் புதியதோர் தலைப்பு
அற்புதமாய் தொடருது கவிஞர்கள் உழைப்பு
உற்பத்தி செய்வதில் நானாநீயா போட்டி
சற்றும் எதிர்பாராத திறமைகளைக் காட்டி

வற்றிவிடவில்லை  பாவலர் படைத்திடும் பாக்கள்
அற்ப வாழ்வற்ற அதிசயப் பூக்கள்
கற்பனையோ பட்டவையோ செவ்வாயின் மாலை
கற்றவர்கள் அறிவினால் நிரம்பிடும் வேளை

கொடுத்துவிட  தலைப்பை செவ்வாய் அன்றே
அடுத்த நொடி படைத்திடுவார் நன்றே
எப்படியென வியந்துமே கேட்போர் பலர்
இப்படியாகப் படைத்துமே புகழடைந்தார் சிலர்

கருத்தரித்தது பிரசவமானது இதன் கீழ்
உருவாக்கி பெருமை கொண்டது வெற்றுத்தாள்
அப்பாடா வார்த்தைகளை அடுக்கியொரு விளையாட்டு
முப்பொழுதும் தப்பிடாது தமிழின் தாலாட்டு

ஜெயம்
16-09-2023

Nada Mohan
Author: Nada Mohan