ஜெயம் தங்கராஜா

சசிச

காதல்

விழிக்குள்ளே நுழைந்து உயிருக்குள் புகுந்தாள்
களிப்பினை மனதிடம் மொத்தமாய் பகிர்ந்தாள்
பார்த்தாள் கடைக்கண்ணால் உண்டானதே சொர்க்கம்
வேர்த்தேன் முதன்முறை புரியாத பக்கம்

என்னவென்று சொல்வேன் புதுவித மயக்கம்
எண்ணத்தை அவளிடத்தில் சொல்லிவிடத் தயக்கம்
என்றுதான் அவளாக காதலினைச் சொல்வாளோ
என்னுயிர் காதலியாய் தனையாக்கி கொள்வாளோ

ஒருநாளில் நிச்சயமாய் அற்புதமும் நிகழும்
பெருநாளாய் அதையெண்ணி உள்ளமதும் மகிழும்
பெண்ணே மவுணத்தினால் ஆசையினை அடைக்காதே
பொன்னே பூப்போன்ற என்நெஞ்சை உடைக்காதே

பருவத்தில் வருவதுதான் உன்மீதே வந்ததடி
இரவுகளும் தூக்கமில்லாக் கனவுகளைத் தந்ததடி
அருகினிலே வருவாயோ செவ்வாயை திறப்பாயோ
விரும்புவது நீயுமென செவிகுளிர உரைப்பாயோ

ஜெயம்
12-12-2023

Nada Mohan
Author: Nada Mohan