பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

தேர்தல்

விரல்களின் மதிப்புதனை உணர்த்துகின்ற நாளிது
அரசியலின் மாற்றத்திற்காக வந்துகொண்ட நாளிது
காதிலே வாக்குறுதி பூச்சுற்றும் அரசியல்வாதி
காசுக்கு விலைபோகப்போகுது ஓட்டுக்களில் சரிபாதி

ஜந்தாண்டுக்கொருமுறை வரும் சனநாயக திருவிழா
மந்திரிகள் மட்டிலிது பணநாயக தெருவிழா
இலவசங்களில் ஏமாந்து வாக்களிக்கும் ஏமாளிகள்
குழப்பிவிட்டு கூத்து பார்திடுவார் கோமாளிகள்

தலைவிரித்தாடும் ஊழலைப்பற்றி முழங்கிடுவார் எதிர்க்கட்சி
நிலைநாட்டுவோம் நல்லாட்சியையென ஆளுங்கட்சி
ஓட்டு வேட்டைக்காக பற்பல நாடகங்கள்
பாட்டுப் பாடவென அவர்அவர்கென ஊடகங்கள்

முடிந்துவிட்டால் தேர்தல் சொன்னதெல்லாம் போச்சு
படியேறி வாக்குத் தேடியவரும் மறைந்தாச்சு
பாழ்பட்ட ஓட்டியந்திரம் கள்ளவோட்டை கூட்டிவிடும்
ஆள்வதற்கு அருகதையற்றவரையே அரியணையில் ஏற்றிவிடும்

ஜெயம்
13-09-2024

Nada Mohan
Author: Nada Mohan