மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

தேவமைந்தன் அவதரிக்கப்போகின்றார்

இது ஆண்டவர் அவனிக்கு வருகின்ற காலம்
அதனால் பூண்டது பூமியும் மகிழ்ச்சியின் கோலம்
மண்ணகத்தை மீட்க விண்ணகத்து இறைவன் வருவாரே
தன்னையே கொடுத்து மானிடர் வாழ்க்கையை மீட்பாரே

ஏழையெளியவர் வாழ்வினில் இனி சந்தோசம் பிறக்கும்
வாழ வழியற்றோர் நாட்கள் இவராலே சிறக்கும்
எளியவரைப்பார்த்து எள்ளிநகையாடியோரும் மனந்திருந்துவார் இவரைப்பார்த்து
இழிவாக்கப்பட்டோரையும் உறவாக்குவார் கை கோர்த்து

மனிதநேயம் உலகில் ஓங்கவைக்கும் உன்னதர் வருகின்றார்
பிணிகள் நீங்கும் அருளினை பொழிந்திட வருகின்றார்
சாந்தியற்ற குவலயத்தில் சமாதான தூதராக வருகின்றார்
சோந்திருக்கும் மானிடரின் துயர் துடைக்க வருகின்றார்

வானத்து எல்லையை காப்பதுபோல் ஞாலத்தையும் காப்பார்
ஊனமுள்ள உள்ளத்தினுள் உருகிவிடும் கருணைதனை சேர்பார்
ஆணவத்தின் பிடியிலிருந்து அல்லலுறும் மாந்தரை விடுவிப்பார்
காணவொரு புதுவுலகை தன்னன்பாலே அழகாக அமைப்பார்

தட்டினால் திறக்கப்படும் இனி நம்பிக்கையோடு தட்டுவோம்
விட்டுவிடாமல் ஒயாது கேட்போம்
கேட்பதும் தரப்படும்
தேடுவோம் இயேசுவைத் தேடுவோம் வாழ்க்கை கிடைக்கப்பெறும்
கூடுவோம் பாலனின் பிறப்பில் உள்ளம் புதுப்பிக்கப்படும்

ஜெயம்

Nada Mohan
Author: Nada Mohan