தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-03.10.2023
கவி இலக்கம்-236
குழலோசை
———————
மாயக் கண்ணன் கையில் குழலோசை
காதில் வந்து முழங்குது தேன் ஓசை
மூங்கில் மரத்து கிளை துண்டு வெட்டோசை
துளைகள் ஒன்பதில் பரவலான ஓசை
நாதஸ்வர வித்துவானின் நல் காரியங்கள் ஓசை
நாலு பேர் கேட்க மயங்கிய ஓசை
கானகத்து பறவைகளின் கீச்சிடும் மயிலின் ஆட்டமும் தனி ஓசை
தென்னங் கீற்றின் உரைசல் சத்த ஓசை
தென்றல் காற்றின் கடலும் காதல் ஓசை
பெண்களின் சதங்கை ஒலி துள்ளல் ஓசை
வளையல் கிலு கிலுப்பில் காதலின் அடி ஓசை
பாட்டும் பதமும் கலந்த பண்ணிசை ஓசை
காதில் விழுந்து பலதாக ஓசைகள் ஒலிக்கின்றனவே
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan