தடமது படைத்தெழும் தனித்துவம்

அபி அபிஷா

வியாழன் கவிதை
இல 23
தடமது படைத்தெழும் தனித்துவம்

பாமுக காற்றலை தொடங்கி 27 வருடம் ஆனதே

இக் காற்றலையை தொடங்கியவர்கள் நடாமோகன் மாமாவும் வாணி மாமியுமே

இவர்கள் சிறிது சிறிதாக சிறுவர்களை சேர்த்து பெருங் கூட்டத்தையே உருவாக்கினார்கள்

இடைக்கிடையே தோல்விகளை சந்தித்தாலும் வெற்றியை நோக்கியே பயணித்தார்கள்

எமது பாமுகத்தில் நாளுக்குநாள் நண்பர்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறார்கள்

காற்றலையிலுள்ள நிகழ்ச்சிகள் முழுவதையும் தாமே செய்யாமல் சிறுவர்களுக்கும் வாய்ப்பளித்து முன்னேற்றுகிறார்கள்

தடைகளை தடம் புரட்டி விட்டு பாமுகத்தை நடத்தி வருகிறார்கள்

தடை அதை உடை சரித்திரம் படை என்பதற்கிணங்க திகழ்ந்து வருகிறார்கள்

இன்னும் பல வருடம் இக் காற்றலை நடக்க வேண்டும்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

Continue reading