தம்பதியர் தினமாம்

பெங்கா ஸ்ரான்லி

அன்றில்களாக அன்று சிறகடித்ததுப் பறந்தோம்
இன்ப துன்பத்தில் சேர்ந்தே பயணித்தோம்
கஷ்டம் கவலை துன்பம் வந்தது
துணையாய இணையாய் இருந்தார் அன்று
இணையது பிரிந்த பின் தனியது மரமாகி
தளர்ந்திடும நிலையது
பித்தம் பிணி இல்லாது பெருங்கடலில்
மூழ்காது
சத்தம் இன்றி அழுது
சமூகத்தில் வாழ்வு
தம்பதியர் என்றால் இவரல்லவோ என்றார்
தளம்பாத குடும்பம் என்றார்
அப்படியே வாழ்ந்தது மகிழ்ச்சியே
ஆனால் இன்றோ தம்பதியர்
தினமதில்
பதியின்றி வெறும் பாவையாய்
தனித்திருக்கும் நிலை
இருந்தும் அழகிய தம்பதியராய்
வாழ்ந்த வாழவை எண்ணி
பேருவகையுடன்!

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய் வெயிலும் உருவ...

Continue reading