10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
சந்தம் சிந்தும் கவிக்காக சிவமணி புவனேஸ்வரன் சுவிஸ்இல் இருந்து.
தலைப்பு : *தீ*
உற்ற பசிக்குஉணவும் ஆக்க உயிர்த்து வருவாயே
ஒற்றைத் திரியில் ஒரு விளக்காகி ஒளியும் தருவாயே
நற்றவர் நடத்தும் வேள்வியில் நீயும் விரும்பிஉறைவாயே
செற்றவர் புரத்தை சிவனார் எரிக்க சேர்ந்து கொண்டாயே
கற்புக் கரசி கண்ணகி அழைக்க கனிந்து வந்தாயே
சிற்ப சிலையாள் சீதா
உயர செந்தணல் வளர்த்தாயே
அற்புதத் தீயே அனலாய் ஏனோ அழிக்கத் துடிக்கின்றாய்
பற்றைக் காட்டையும் படர்ந்து சென்றே பற்றி எரிக்கின்றாய்
உற்றவர் உறங்க குடிலை எரித்து
உயிரைக் குடிக்கின்றாய்
பெற்றவள் வயிற்றில் பெரு நெருப்பூட்டி
பெருமை கொள்கின்றாய்
தீயே தீயே தீண்டாதே
தீமை ஆற்றி திளைக்காதே

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...