திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 162

தலைப்பு — இருபெரும் பதவியில்

இருபெரும் பதவியில் இருந்து பணியாற்றுவார்
விரும்பும் பொருளை விரைந்து பெற்றிடுவார்
நெருக்குதல் நசுக்கினும் நினைத்ததை சுவைத்திடுவார்
இருந்திடுவார் முப்பத்திரண்டுடை இளைவேலின் கூட்டுக்குள்ளே.

நல்லதை தீயதை நன்றாய் அறிந்தவர்
வில்லனாய் மாறுவார் வீண்வார்த்தைப் பாவனையால்
நல்லுரையும் வழங்குவார் நாடுவோர் செவியினிக்க
அல்லலுறச் சுடுவார் அழுக்குச் சொல்லாலே.

இவரது பண்புகள் இரண்டும், ஈர்த்திடத்
தவறாது இன்பத்தையும் துன்பத்தையும் தக்கபடி
விவகரித்த நடத்தையால் வாடுவதும் வளர்வதும்
இவரது மாளிகை என்பதில் மாற்றம்மில்லை.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்.
London
15/02/2022

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading