துளிப்பாகும் வசந்தம்

நகுலா சிவநாதன்

துளிப்பாகும் வசந்தம்

மொட்டும் அரும்பும் துளிர்க்கும் அழகே!
கிட்ட நின்று பார்க்க பேரழகு!
இட்டுக் கட்டும் மொட்டும் இன்று
இயற்கை தந்த வரமன்றோ!

துளிர்க்கும் அரும்பும் விரிக்கும் வண்டும்
களிக்கும் வண்ண காலை விடியல்
வளியின் சுகந்தம் விழியில் படவே
வெளியில் பூக்கும் வழியின் பூவே புகழ்மணம்

வாச மலராய் அரும்பும் துளிர்ப்பும்
வண்ண மயமாய் இயற்கை இன்பம்
காணக் கண்கள் குளிருது தினமும்
தானம் தவமாய் துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் 1803

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading