நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

நகுலவதி தில்லைதேவன்

165. சந்தம் சிந்தும் கவி

நாதியற்ற மானிடர்கள்

காசியினில் மானிடர்கள்
நாதியற்று வாழும் நிலை
மாறிடாதோ

ஊரையெல்லாம் சூறையாடி
பையினுள் போட எண்ணி
யுத்தம் என்ற பெரு நெருப்பில்
வதைக்கும் நிலை
மாறிடாதோ?

குஞ்சு முதல் முதியவர் வரை
அஞ்சி ஓடும் நிலைமை
மாறிடாதோ?

ஓடி ஓடி உழைத்து வாழ்ந்த
மண்ணை விட்டு
உயிரை பிடித்து ஊர் ஊராய்
ஓடும் நிலை
மாறிடாதோ

எல்லை கடந்து தஞ்சம்
புகுந்தது வாழும் மாந்தர்
நிலை மாறிடாதோ

ஈனம் அற்ற அரக்கர்
மனம்மாறி யுத்தம் நிறுத்தி
மாந்தர் வாழ வழிகாட்டும்
பாதை திறந்திடாதோ?
இறைவா

அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan