தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

நகுலா சிவநாதன்

காற்றின் வழி மொழியாகி வாழ்வு தந்தாய்

சொற்களின் கோர்வையில் சுகத்திடை மொழியாகி
காற்றிடை வாழ்வு தந்த வானொலியே
காதலின் ஊற்றாய் ஆனாய்

மூச்சிடை காற்றோடு முனங்கியே எழுந்த
பேச்சிடை வாய்மொழியாகி
வண்ணத்தேரில் பவனி வருகிறாய்
செவிக்கு விருந்தாக சேதிகள் சொல்லி
சோதியாய் இளையோர்க்கு ஊக்கமானாய்

வானிடை தவழ்ந்து வண்ண தொழில்நுட்ப
வலையோடு வலம் வருகிறாய்
நாமின்று நற்றமிழ் உரைக்க வந்த வானலையே வாழ்க!

வரலாறு உன் பெயர் சொல்லும்
வண்ணக் கனவுகள் படைப்புகளாகும்
எண்ண அலைகள் ஏற்றம் பெறும்
எழுதிடும் கைகளும் உழுதிடும் உயர்விற்காய்

ஐரோப்பிய வானொலி வரலாற்றில்
படைப்பின் நாயகமாய் பாரிலே
உயர்ந்திட்ட வானலையே!
மொழியாகி வாழ்வு தந்தாய் வாழியவே!

நகுலா சிவநாதன் 1749

Nada Mohan
Author: Nada Mohan