நகுலா சிவநாதன்

பத்துமலை முருகா!

பெருகிடும் பக்தியில்
உருகிடும் உள்ளம்!
பெயரினைச் சாற்றியே பெருமையும் கொள்ளும்!
அருகிடும் ஆசையும் அவனியில் மாறும்!
அன்பிலே நாளுமே
உன்னடி சேரும்!
வருகிற வளங்களும் வாஞ்சையாய்ப் பாடும்!
வையமும் புத்தொளி
பரப்பிடும் நாளும்!
உருகிடும் அன்பிலே உறைந்திடும் மனமே!
உளத்தினை வேலவன் கனிவுடன் காப்பான்!

நகுலா சிவநாதன்1746

Nada Mohan
Author: Nada Mohan