” பூத்துவிட்டது புத்தாண்டு “

ரஜனி அன்ரன்

“ பூத்துவிட்டது புத்தாண்டு “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 02.01.2025

மத்தாப்பு வாண வேடிக்கையோடு
முத்தாப்பாய் பூத்தது புதிய புத்தாண்டு
புதிய தொடக்கங்கள்
புத்துணர்வுத் தூண்டல்கள்
புதிய தேடல்கள் வலுப்பெறட்டும்
கொடிய நோய்களும்
நெடிய போர்களும் அகலட்டும்
சமூக ஒருங்கிசைவும் மேம்படட்டும் !

கடந்த ஆண்டு பலதும் பத்துமாய்
இயற்கையின் சீற்றமும் சீர்குலைவுமாய்
இடர்களாய் வந்து இடையூறு செய்து
விடை பெற்றுச் சென்றதே விருப்பின்றி
பூத்துவிட்ட புத்தாண்டு
புன்னகையை அள்ளித் தரட்டும்
புண்பட்ட உள்ளங்களை
பண்படுத்தி மகிழட்டும் !

இருபத்தி ஐந்தில் பூத்திட்ட ஆண்டே
திருப்பங்கள் மலர்ந்திட
விருப்பங்கள் நிறைவேறிட
எண்ணங்கள் வண்ணங்களாக
ஏற்றங்கள் மாற்றங்கள் உருவாகிட
இணைக்கரம் தந்துவிடு புத்தாண்டே !

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading