பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

” பூத்துவிட்டது புத்தாண்டு “

ரஜனி அன்ரன்

“ பூத்துவிட்டது புத்தாண்டு “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 02.01.2025

மத்தாப்பு வாண வேடிக்கையோடு
முத்தாப்பாய் பூத்தது புதிய புத்தாண்டு
புதிய தொடக்கங்கள்
புத்துணர்வுத் தூண்டல்கள்
புதிய தேடல்கள் வலுப்பெறட்டும்
கொடிய நோய்களும்
நெடிய போர்களும் அகலட்டும்
சமூக ஒருங்கிசைவும் மேம்படட்டும் !

கடந்த ஆண்டு பலதும் பத்துமாய்
இயற்கையின் சீற்றமும் சீர்குலைவுமாய்
இடர்களாய் வந்து இடையூறு செய்து
விடை பெற்றுச் சென்றதே விருப்பின்றி
பூத்துவிட்ட புத்தாண்டு
புன்னகையை அள்ளித் தரட்டும்
புண்பட்ட உள்ளங்களை
பண்படுத்தி மகிழட்டும் !

இருபத்தி ஐந்தில் பூத்திட்ட ஆண்டே
திருப்பங்கள் மலர்ந்திட
விருப்பங்கள் நிறைவேறிட
எண்ணங்கள் வண்ணங்களாக
ஏற்றங்கள் மாற்றங்கள் உருவாகிட
இணைக்கரம் தந்துவிடு புத்தாண்டே !

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading