“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

பொன்.தர்மா

வணக்கம் .
சந்தம் சிந்தும் கவி நேரம்.
*** கோடரிக் காம்பு ***

கையடக்கம், தன்னடக்கம் , குசும்புக்காரக் , கொலைக் கூட்டம்.
கூட்டான கருவியுடன், களம் நின்று போராட்டம்.

தலையின்றி வால், கொலையாடவும் முடியாது.
வால் இன்றி, தலையால், கொடி நாட்டவும் இயலாது.

மந்திரியாய் இருந்து மாயைக்குள்ளே புகுந்து —
தந்திரத்தால் தன்குலத்தைத், தரைதனிலே படுக்க வைக்கும்.
கொக்கா கோடரிக்காம்பா
வறுமைதனை நீக்கி, வயிற்றுப் பசி போக்க வைக்கும் , கில்லாடி .
வாயாடிக் கும்பல்களால், குலம் கொல்லி என்ற பட்டம் சுமக்கும், ஒரு உபகாரி .

ஆடுகின்ற ஆட்டத்திலை, அதன் மேலே , குறுணியும் குற்றமில்லை.
கூடுகிற கூட்டத்தாரின், குத்துதலோ , பாழும் மனது, கொஞ்சமும் பொறுப்பதில்லை..

பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan