பொன்.தர்மா

வணக்கம் .
சந்தம் சிந்தும் கவி நேரம்.
*** கோடரிக் காம்பு ***

கையடக்கம், தன்னடக்கம் , குசும்புக்காரக் , கொலைக் கூட்டம்.
கூட்டான கருவியுடன், களம் நின்று போராட்டம்.

தலையின்றி வால், கொலையாடவும் முடியாது.
வால் இன்றி, தலையால், கொடி நாட்டவும் இயலாது.

மந்திரியாய் இருந்து மாயைக்குள்ளே புகுந்து —
தந்திரத்தால் தன்குலத்தைத், தரைதனிலே படுக்க வைக்கும்.
கொக்கா கோடரிக்காம்பா
வறுமைதனை நீக்கி, வயிற்றுப் பசி போக்க வைக்கும் , கில்லாடி .
வாயாடிக் கும்பல்களால், குலம் கொல்லி என்ற பட்டம் சுமக்கும், ஒரு உபகாரி .

ஆடுகின்ற ஆட்டத்திலை, அதன் மேலே , குறுணியும் குற்றமில்லை.
கூடுகிற கூட்டத்தாரின், குத்துதலோ , பாழும் மனது, கொஞ்சமும் பொறுப்பதில்லை..

பொன்.தர்மா

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

    Continue reading