சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 296
18/02/2025 செவ்வாய்
“முகமூடி”
—————
முகமே, அகமதன் கண்ணாடி
மூடி மறைப்பது சரியாமோ!
இகத்தில் இப்படி பலகோடி
இருப்பதை நீயும் அறிவாயோ!

நல்லவர் தாமென முகம் மூடி
நாடெனும் அரங்கு தனிலேறி
அல்லவை செய்யும் ஒருபோது
அகத்திரை கிழியும் அப்போது!

நன்மையும் செய்யுமா முகமூடி
நலமதும் தருமா உனைத்தேடி!
வன்மை செய்வோர் சிலர் கூடி
வரமாய் கொள்வதுஅதை நாடி!

சுயத்தை மறைக்கும் முகமூடி
சுகம் காண்பவன் ஒரு பேடி!
பயத்தை ஊட்டிடும் முகமூடி
பாரில் அழித்திடு இதை தேடி!

வாயை, மூக்கை மறைத்து
வாழ வைத்தது ஓர் கவசம்!
பேய் உயிர்க்கொல்லி அழிந்து
போக வைத்தது முக கவசம்!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading