மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 217
04/04/23 செவ்வாய்
“தவிப்பு”
———-
மனத்தில் நாளும் தவிப்பு!
மண்ணில் என்றும் இருப்பு!
கனத்தில் அதனின் சிறப்பு,
காலம் கொடுத்த அமைப்பு!

தாயுள் கருவின் தவிப்பு,
தரணி காணும் விருப்பு!
ஆயுள் முழுதும் நிலைப்பு!
அவனி தரும் அமைப்பு!

அணைகள் கொண்ட தவிப்பு,
அன்னை அவளின் வளர்ப்பு!
பிணைகள் தாராத தடுப்பு,
பிறழ்வு கொள்ளும் அமைப்பு!

பாலை உண்ணும் விருப்பு,
பண்டம் உடையும் முனைப்பு!
வேளை அறியாத நினைப்பு,
வேதனை தருமோர் தவிப்பு!

கற்றலை நாடும் முனைப்பு,
காலமது தந்திடும் சிறப்பு!
உற்சாக பானத்தின் உவப்பு,
உனக்குத் தாராது மதிப்பு!

விரும்புவது அமையும் தவிப்பு,
விளையாது வேளை விடுத்து!
கரும்பும் முற்றினாலே சுவைப்பு!
காலத்தின் எமக்கான படிப்பு!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading