22
Mar
கவிதையே தெரியுமா
காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம்...
20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 165
08/03/2022 செவ்வாய்
“திமிர்”
தரணியில் தாமே பெரிதென்பர்
தப்புக் கணக்கும் போட்டிடுவர்
தலையும் விரித்துப் படமெடுப்பர்
தரங்கெட்ட திமிர் தாங்கிடுவோர்!
தேவைக்கு அதிகமாய்ச் சேர்த்திடுவர்
தேடியதைத் தெருவெலாம் காட்டிடுவர்
தேவையிலாத் திமிரும் கொண்டிடுவர்
தேய்ந்திடும் பெயரும் தாம் உணரார்!
தலையில் கனமும் கொண்டிடுவர்
தரவுகளில் தாமே நிறைவென்பர்
தமக்குத் தாமே புள்ளி யிடுவர்
தயவின்றி திமிருடன் உலாவருவர்!
அழகு தம்மிடம் நிறையவென்பர்
அதனால் ஆணவம் கொண்டிடுவர்
அகிலத்தில் தாமே முதலென்பர்
அடங்காத் திமிர் அடைந்திடுவர்!
திமிர்கொண்ட உள்ளம் தள்ளாடும்
தீச்சுவாலை போல் தினமும் சுடும்
தீதெனும் குப்பையில் சேர்த்துவிடும்
தீண்டினாலே சுட்டு எரித்தும் விடும்!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
22
Mar
வஜிதா முஹம்மட்்
வான் பூமி மாற்றவில்லை
...
22
Mar
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_184
"மாற்றம்"
மாற்றம் காண
ஏற்றம் கண்டு
மாறுவது பண்பு
மாறாதது வீம்பு!
நம்மை...
21
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-03-2025
மாற்றம் மனிதனுக்கு சிறப்பு
மாறா மனிதனே தவிப்பு
தோல்வியில் வருவது பருதவிப்பு
வெற்றியில் உணர்வது...