10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 165
08/03/2022 செவ்வாய்
“திமிர்”
தரணியில் தாமே பெரிதென்பர்
தப்புக் கணக்கும் போட்டிடுவர்
தலையும் விரித்துப் படமெடுப்பர்
தரங்கெட்ட திமிர் தாங்கிடுவோர்!
தேவைக்கு அதிகமாய்ச் சேர்த்திடுவர்
தேடியதைத் தெருவெலாம் காட்டிடுவர்
தேவையிலாத் திமிரும் கொண்டிடுவர்
தேய்ந்திடும் பெயரும் தாம் உணரார்!
தலையில் கனமும் கொண்டிடுவர்
தரவுகளில் தாமே நிறைவென்பர்
தமக்குத் தாமே புள்ளி யிடுவர்
தயவின்றி திமிருடன் உலாவருவர்!
அழகு தம்மிடம் நிறையவென்பர்
அதனால் ஆணவம் கொண்டிடுவர்
அகிலத்தில் தாமே முதலென்பர்
அடங்காத் திமிர் அடைந்திடுவர்!
திமிர்கொண்ட உள்ளம் தள்ளாடும்
தீச்சுவாலை போல் தினமும் சுடும்
தீதெனும் குப்பையில் சேர்த்துவிடும்
தீண்டினாலே சுட்டு எரித்தும் விடும்!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
16
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-07-2025
அடுத்தவர் பொருள் மீது
ஆசை கொள்ளும் மனம்
இவர்கள் உழைப்பினை
அலட்சியமாக்கும் தினம்
ஆடம்பரத்திற்காய்...
16
Jul
வணக்கம்
இசை..
ஞாலக்குன்றில் இசை
நமக்கென கிடைத்த கொடை
அகத்தின் ஆளும் திறனில்
ஆற்றுப்படுத்தும் மருந்தே
இசை ஈர்ப்பில் பலர்
இதயம் கவர்ந்த...
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...