13
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
13
Mar
கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025
ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள்...
13
Mar
புனித ரமலானே
புனித ரமலானே
வஜிதா முஹம்மட்
மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 184
09/08/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
“தானே வரும் மிடுக்கு”
——————————-
மழையொன்று வந்துபோய்
மறுநாள் சிறு வெயிலில்…
குழைவான காட்சியொன்று
குளிரவித்தது என் கண்ணை!
செயல்வீரர் வரவேற்பில்
செங்கம்பளம் விரித்தது போல்…..
அயல்வீட்டு ரோஜாச் செடி
அருஞ் சிகப்பாய் பூத்ததுபோல்….
செந்தழல் துண்டொன்று
சிதறியே விட்டது போல்……
அந்தரத்தில் உலாவரும்
ஆதவனின் துகள்கள் போல்…..
மண்ணிறத் தட்டொன்றில்
மாணிக்கம் பதித்தது போல்….
செந்நிறக் குருதி யெங்கும்
சிந்திக் கிடந்தது போல்……..
அழகுமிகு அஞ்சுகத்தின்
அலகின் நிறத்தது போல்……..
பழகுதமிழ் புலவனவன்
பாரதியின் திலகம் போல்…….
பரம்பியிருந்த கூட்டத்தில்
இரந்து பெயர் கேட்டேன்.
எம் பெயர் “தம்பளப் பூச்சி”
என்றன அவை மிடுக்குடன்!
நன்றி
“மதிமகன்”

Author: Nada Mohan
14
Mar
நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு
ரசிந்து...
14
Mar
அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
...
13
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே
நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால்...