“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

“மாற்றம்”

நேவிஸ் பிலிப் கவி இல (145) 5/ 09/ 24

காலச் சுழற்சியிலே
மாறி வரும் உலகினிலே
மாற்றம் ஒன்றே மாறாதது
நாகரீக வாழ்க்கையிலே
மோகம் கொண்டு வாழ்கின்றோம்

வரலாற்றை மறந்தோம்
பண்பாட்டை இழந்தோம்
வாழ்க்கை முறையை
வாடிக்கை வழக்கங்களை
மாற்றி விட்டடோம்

வேர் தேடி ஊற்றுத்தேடி
பழமையின் அழகினை இரை மீட்டி
நவீனத்தோடு சவால் தொடுக்க
முனைப்போடு ஓடுகின்றோம்

பழமையை புதுப்பித்து
பாரம்பரிய நடை முறைக்கு
புத்துயிரூட்ட ஏனோ
மறந்திட்டோம்

கதை சொல்லிகள் அருகிப் போக
கேட்பவர்கள் ஆர்வம் குன்ற
சொல்வதற்கும் ஆளில்லை
கேட்பதற்கும் நேரமில்லை்

மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ.?
தார்மீக எண்ணங்களை
ஆழ வேரூன்றி அகலக் கிளை பரப்ப
மாறுவோம் மாற்றம் காண்போம்

நன்றி வணக்கம்.
நேவிஸ் பிலிப்

Nada Mohan
Author: Nada Mohan