புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ரஜனி அன்ரன்

“ காற்றின்வழி மொழியாகி வாழ்வு தந்தாய் “…..கவி…ரஜனி அன்ரன் (B.A) 15.02.2024

ஒற்றை மனிதனின் உருவாக்கம்
மாற்றான் தேசமதில்
காற்றலையாகி காற்றின் வழி மொழியாகி
தேம்ஸ்நதிக் காற்றோடு கலந்து
தேசமெல்லாம் தமிழ்மணம் பரப்புதே !

காற்றின் மொழியாகி காதோரம் வந்து
ஊற்றாகி உறவாகி உறுதுணையுமாகி
விழியாகி ஒளியாகி விடியல் தந்தாய்
உள்ளம் கவர்ந்தாய் இல்லம் தேடி வந்தாய்
வளம் தந்தாய் மொழியாகி வாழ்வும் தந்தாய்
கவிக்களமும் தந்தாய் கவி படைக்க !

வானொலி தேன் ஒலியாகி
தேசமெல்லாம் ஒலிக்குது
தேடலுக்கு வலுச்சேர்த்து
பெருக்கியது ஆற்றலை – உன்
படைப்புக்களும் தொகுப்புக்களும் ஏராளம்
பயன் பெற்றவரும் தாராளம்
தொழில் நுட்பத்திலும் அதிவேகம்
தொட்டு விட்டாய் இலக்கின் உச்சம் !

மார்க்கோனியின் மகத்தான கண்டுபிடிப்பு
ஹார்மோன்களுக்கு எல்லாம் மருந்தாச்சு
தனிமையைப் போக்கி தைரியத்தைத் தந்த
காற்றின் மொழியே காதலின் சுகமே – நீ
ஆற்றும் சேவையோ அளப்பெரிது
உனை வாழ்த்திட வார்த்தைகள் இல்லை
என்றும் வாழ்க பல்லாண்டு வளமோடு நீ !

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading