வசந்தா ஜெகதீசன்

சித்திரம் பேசுதடி…..
செழிப்பில் செதுக்கிய வனப்பு
செம்மையில் பசுமைக் கலப்பு
அணியென மலர்கள் அலங்கரிப்பு
அவனியே விழாக்கோல வியப்பு

கடலும் வானும் ஒன்றிக்க
கச்சிதமாய் வெப்பம் தணிந்திட
தண்ணொளி நிலவே பிரகாசம்
தரணி மயங்கும் எழில்க் காலம்

சுற்றுலாச் சுவாசம் சுதந்திரமாய்
விடுமுறை ஞாலம் விண்ணொளியாய்
எங்குமே எழிலின் விம்பங்கள்
ஆலயதரிசன ஊர்க்கோலம்
உறவுகள் சொந்தங்கள் உல்லாசம்
சித்திரமாய் பேசும் ஆவணியே
செதுக்கிய புனையா ஒவியமே.
நன்றி
மிக்க நன்றி குரலிணைவிற்கும்
தட்டிக்கொடுப்பின் ஊக்குவிப்பிற்கும்.
நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading