நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

புரிய முயலாதே 1

நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும் இன்று நிகழ்கின்றது

சுகம் வந்தால் நிரந்தரமென நம்பி
துயரம் நுழைகையில் ஏனென வெம்பி
இரண்டுங்கெட்டான் நிலையில் நாட்கள்
பிடிக்கமுடியாமல் நீராக வழிகின்றன

வந்த பாதை தெரியாத போது
போகும் பாதை தெரிவதும்தான் ஏது
முடிவில்லா ஒரு நீண்ட பயணமாக
விழுந்தாலும் எழுந்து நடக்க
சொல்லித் தருகுது காலம்

ஜெயம்

Author: