இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_

கள்ளமில்லை கபடமில்லை நெஞ்சினிலே என்றும்

வெள்ளைமனசு பூத்திருக்கு விரும்பும் இராகம் கனிந்திருக்கு

காற்றுவெளி ஓரத்திலே கானம் இசைக்கும் நேரத்திலே

தனிமையும் வெறுமை இல்லையே தனிச்சுகமே

பனிமலராய் நானும் பக்குவமாய் பாடலொன்றை

எண்ணமும் பாயுதே ஏழிசையும் மீட்டிடவே நன்றாய்

தெள்ளத் தெளிவாகி தெவிட்டாத பாசுரமும்

மரங்கள் அசைந்தாட மனதும் இசைந்தாட

குருவிகள் குரல்கொடுக்க குதூகலம் பிறந்திருக்க

அருவிபோல் அகம் குளிர ஆனந்தம் குலவிடவே

சருகுகள் சத்தமிடத் தாளங்கள் ஒலிபரப்ப

தேவமங்கையாக தேனிசை நானெடுத்து பரவியே நின்றிடவும்

வளைந்தாடும் செடிகளுமோ தலையாட்டி இரசித்திடவே
சிவரூபன் சர்வேஸ்வரி

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading