வாழ்த்து

செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து

தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்

தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து நில்லாது
வாஞ்சையாய்.நகரும் வாழ்த்து

சித்திரை புதுவருடம் சித்திரமாய் வரவும்
நித்திரை மறந்தும்
வாழ்த்துக்கள் பரவும்

ஆசி கொடுப்பதும்
ஆயிரம் புண்ணியம்
நேசி வாழ்த்தை
நேயமுடன் வாழ்வோம்

செல்வி நித்தியானந்தன்

Author: