பவனி வரும் பாவையர்க்கு வாழ்த்துகள்

ராணி சம்பந்தர்

வாரம் போனது தெரியாது
வருஷம் ஆனது புரியாது
350 ஆம் வாரம் சொரிந்து
முழுமூச்சாய் மெருகூட்டி
மனமோ களிப்பானதே

உரமானதே அத்திவாரம்
கரம் கொடுத்ததோ வாரம்
ஒருமுறை என இலண்டன்
தமிழ் வானொலி தொலைக்
காட்சியில் மலர்ந்த பாமுகப்
பூக்களும் விழிப்பானதே

நாவனிலோ சுவைதனிலே
அவனியில் பவனி வந்தே
அடுக்கடுக்கு சொற்களில்
துடுக்கு மிடுக்காகத் தந்து
அசத்திடும் பா வையர்

கிடைத்தது எம் அதிர்ஷ்டமே
350 ஆம் வாரமல்ல இன்னும்
இன்னும் பல்லாயிரம் வாரம்
படைப்புகள் வளர பா வையர்
பணி தொடர வாழ்த்திடுவோம் .

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading