பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பவனி வரும் பாவையர்க்கு வாழ்த்துகள்

ராணி சம்பந்தர்

வாரம் போனது தெரியாது
வருஷம் ஆனது புரியாது
350 ஆம் வாரம் சொரிந்து
முழுமூச்சாய் மெருகூட்டி
மனமோ களிப்பானதே

உரமானதே அத்திவாரம்
கரம் கொடுத்ததோ வாரம்
ஒருமுறை என இலண்டன்
தமிழ் வானொலி தொலைக்
காட்சியில் மலர்ந்த பாமுகப்
பூக்களும் விழிப்பானதே

நாவனிலோ சுவைதனிலே
அவனியில் பவனி வந்தே
அடுக்கடுக்கு சொற்களில்
துடுக்கு மிடுக்காகத் தந்து
அசத்திடும் பா வையர்

கிடைத்தது எம் அதிர்ஷ்டமே
350 ஆம் வாரமல்ல இன்னும்
இன்னும் பல்லாயிரம் வாரம்
படைப்புகள் வளர பா வையர்
பணி தொடர வாழ்த்திடுவோம் .

Author: