வாழ்த்து

ராணி சம்பந்தர்

வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே

திருமணம் ,தீபாவளி ,
பிறந்த நாள் ,பொங்கல் ,
பூப்புனித நீராட்டு விழா ,
நத்தார் என இன்னும் பல
பண்டிகை கொண்டாடிட
பாசமுடனே தங்கிடுமே

மனதார வாயாற நினைந்து
இன ஒற்றுமை இணைந்து
அறமோடு திறமாக கரம்
கோர்த்து உரமிட்டு வரம்
சேர்த்த வாழ்த்து குவிந்து
பங்கிடவே

பாமாலை எனும் பூமாலை
இட்டு இலண்டன் தமிழ்
வானொலி தொலைக்காட்சி
சேவையையும் வாழ்த்துக்
கூறி வரவேற்றிடுவோமே .

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading