புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மனச்சாட்சி…..
வெந்து மடிந்து நாம் வெற்றிதொலைத்தாலும்
வேதனை சுமந்திட்ட அன்றில் பறவைகளாய்
ஆர்பரித்து மடிந்தாலும்
அகத்தின் கூட்டிற்குள் ஆழப் புதைந்தது
ஆற்றும் செயல்களை ஆய்ந்து அளப்பது
வேற்றுச் செயல்களை வெட்டிப்புதைப்பது
வேர்கொண்ட சாட்சிக்கூடு விலத்தாத ஆட்சிக்கூடு
தான் கொண்ட நேர்மையை தர்கித்து தரிசிக்கும்
தன்னியல்பின் பயணத்தை நேர்மையில் நிலைப்பிக்கும்
உண்மையின் முதலாளி உராய்கின்ற தொழிலாளி
அகத்தின் நீதிபதி ஆழஉழும் மனச்சாட்சி
புகுந்த பூத்திட்ட அகத்தை புடமிடும்
நின்று நிதானித்து நிஜத்தை நிலைப்பிக்கும்
உள்ளகத்தில் உறங்காது உண்மையை மறைக்காது
நேர்மையைப் போதிக்கும் நித்திய தரிசனம்
காயத்தின் கருங்குழி காப்பகத்தின் வெகுமதி
தார்ப்பரியம் கொண்டது தனித்துவத்தை உரைப்பது
சுட்டிட சுட்டிட வெண்மையுறும் சங்குபோல்
பட்டிட பட்டிட பக்குவத்தை பறைசாற்றும்
மனச்சாட்சி மன்றிலே மனுநீதி அகத்திலே!
நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading