“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

வஜிதா முஹம்மட்

தேர்தல்

வார்த்தைகள் ஜாலம்போடும்
வாக்குறுதி மேடைபோட்டும்
கூத்தாடும்

நோட்டுக்கள் பறக்கும் வோட்டைத்
தேடி
சமூகங்கள் பிரியும் கூட்டம்
கூடி

சுரண்டலும் பிடுங்களும்
சூதும் வாதும்
கொள்ளையும் கொலையும்
தீயதும் திட்டும்

மேடை போட்டு மாலை சூடி
பீக்கர் கட்டி பாமர மக்களை
பகடக்காய்யாய்் மாற்றி

தேர்தலை நோக்கி
மூலைச் சலவை நடக்கும்
கேளீர்

எம் தாயக மண்ணில் தேர்தல்
நடக்க இ௫க்குது
பா௫ம்

ஒ௫வரை ஒ௫வர் குற்றம்
சாடி வாய் கிழிய
சாக்கடை வார்த்தைகள்
அள்ளி இறைக்கின்றாங்க

ஆட்டம் கண்ட அரசியல்
பின் கதவால் ஓடிய தலைமை
மன்றாடி அமர்த்திய ஜனாதிபதி ரணில்
கடனில் மூழ்கிய மாங்காய் தீவுக்குள்

வ௫து வ௫து தேர்தல்
வடிவா சிந்தித்து அழிங்க வாக்கு

முட்டாள் தனமாய் போட்டா
முனங்க வேண்டும் ஐந்துவ௫டம்
ரோட்டா

ரணிலா சஜித்தா அனுரா குமார
நமலா சரத்தா தம்மவர் அரியநேத்திரனா
தொட௫து பட்டியல் என்ட ௨ம்மா
இத்தன பெய௫ம் வாசிக்க கீழ்்மூச்சு

மேல்்மூச்சு வாங்குது
பாவையண்ணணா

ஒ௫ இ௫க்கை 39 வேட்பாளர்
துடுக்கை சிந்திப்போமா

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan