தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

வலியதோ முதுமை…

ஆற்றல் விருட்சத்தின் அளப்பெரும் தகமை
போற்றும் நிகழ்வுகள் புவியின் உரிமை
தோல்வியும் எழுகையும் வீரியமெழுத
தொன்மையின் பாரியம் வரமென நிலவ
முதுமையின் தரிசனம் முகிழுமே எமக்குள்
முன்றலில் கரிசனம் குன்றிடும் பாதை
நிழல்தரு தருவென நிமிர்ந்திட்ட வேளை
அன்றில் பறவையாய் அலைந்திட்ட பொழுதில்
எத்தனை கரிசனை ஏற்றமாய் மிளிரும்
எங்கும் இளமையின் வீறுகொள் நிகழும்
தாங்கிடும் தகமையின் தனித்துவ உலகு
தாங்கலாய் இன்று தளர்வது கடினம்
ஏங்கலில் உள்ளம் இடரது இன்றி
வாழ்தலில் விதைத்திட்ட வனப்பின் மிகைக்குள்
தொய்தலின்றிய தோழமை உரமே
நெய்தல் ஆடைபோல் நிஜத்தை பேணும்
நிமிர்தல் வாழ்வின் நிலவரமாகும்
வலிமையே முதுமை வையம்கொள் தகமை.

நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan