தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

விடியாத இரவொன்று

வியாழன் கவி : “விடியாத இரவொ ன்று ”
14/03/ 2024

இருளோடு இருளாக
இழந்தைவைகளை சுமந்த படி
விடியாத இரவு ஒன்றில்
படகு ஏறி கரை கடந்தேன்
தாய் மண் தவிப்பு நெருப்போடு

இறுதி சமர் காலமதில்
ஒட்டிக்கொண்ட உறவெல்லாம்
சிதறும் படி குண்டு மழை
கூக்குரல் கேட்காத வெடியோசை
விடியாத இரவு ஒன்றில்
உயிர்பிச்சை பெற்ற மகன்
கரை கடந்தான் படகேறி

ஆண்டு பல கடந்தோடி
அழியாத நினைவெல்லாம்
சுமக்கின்றான் விடியாத இரவோடு
விடி வெள்ளி காண்பதற்கு!!!

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan