அகிம்சையெனும் காவியம்

ரஜனி அன்ரன் (B.A) “ அகிம்சையெனும் காவியம் “ 25.09.2025

தியாகமே அகிம்சையெனும் ஆயுதம்
மகாயாகமே உன் மனஉறுதியின் காவியம்
அறவழி நின்ற பலமே உன்உயிரோவியம்
அகிம்சையெனும் காவியத்தின் அத்தியாயம்
இனத்திற்கான தியாகத்தின் உச்சம்
இன்னுயிரை ஈகம்செய்ததே அகிம்சைக்கு அர்ப்பணம்
அண்ணலே இதற்கு நீயேநிரூபணம் !

தமிழ்வானில் என்றும் உன்கீர்த்தி
தனித்துவமான தியாகத்தின் மூர்த்தி
காணிக்கையாக்கி காவியமானாய்
அகிம்சையெனும் காவியம் வரலாற்றின் ஓவியம் !

மக்கள் புரட்சிக்கு வித்திட்ட மறவனை
வரலாற்றைப் புரட்டிவிட்ட புரட்சியாளனை
தமிழன்னைக்கு தன்னையே ஈகம்செய்த காவியனை
மனதில் நினைப்போம் மறவாதிருப்போம் – நீ
ஊரெழுவில் பிறந்ததனால் ஊரேபெருமைபெற
தேரடியில் துயில்கொண்டதனால் நல்லூரானும் பெருமை பெற்றானே !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading