தமிழே..

வசந்தா ஜெகதீசன்
தமிழே…
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம் கலந்தாய்
இன்தமிழ் ஈர்ப்பில்
இலக்கிய நயத்தில்
செந்தமிழ் நிறைந்த செம்மொழி- வாழி
சான்றுரை பலவாய்
சாதிக்கும் தமிழே
வென்றுரை வீரத்தின் வெற்றியின் மிடுக்கில்
எம் தமிழ் ஊற்றே
உணர்வின் வீச்சே
உயிரின் நாதமாய்
ஓங்குபுகழாய்
மங்கத் தமிழே மறவர் மொழியே!
கணினி யுகத்தில்
காசினி மிளிர்க!
நன்றி

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading