” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தமிழ் 101

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026

உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய் வளர்த்தவளே
முதியோர்க்கு மரியாதை புகுத்தவளே

தேனினும் இனிய செம்மொழியே
தெவிட்டாமல் நாவுரைக்கும் மொழியே!
அலையாய் சோதனை கண்டாலும்
அசையாது நின்ற பாறை நீ

பாறையில் செதுக்கியவை அழியாமல்
ஏட்டினில் எழுதியவை கரையாமல்
பலநூறு ஆண்டுப் பழமை பொருந்தி.
பாரெல்லாம் சிறந்து விளங்குகின்றாயே

உள்ளம் உருகிய பாடலுக்கு
உணர்வாய் உயர்ந்து நின்றாய்
புவியெங்கும் பரவி நீ
புதியவோர் உலகம் படைக்கின்றாயே!

Jeba Sri
Author: Jeba Sri