தமிழ் 101

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026

உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய் வளர்த்தவளே
முதியோர்க்கு மரியாதை புகுத்தவளே

தேனினும் இனிய செம்மொழியே
தெவிட்டாமல் நாவுரைக்கும் மொழியே!
அலையாய் சோதனை கண்டாலும்
அசையாது நின்ற பாறை நீ

பாறையில் செதுக்கியவை அழியாமல்
ஏட்டினில் எழுதியவை கரையாமல்
பலநூறு ஆண்டுப் பழமை பொருந்தி.
பாரெல்லாம் சிறந்து விளங்குகின்றாயே

உள்ளம் உருகிய பாடலுக்கு
உணர்வாய் உயர்ந்து நின்றாய்
புவியெங்கும் பரவி நீ
புதியவோர் உலகம் படைக்கின்றாயே!

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading