13
Nov
நேவிஸ் பிலிப் கவி இல(521)
பிரபஞ்சத்திலோர் பிரசவம்
வானலையில் தவழ்நது
காதோரம் நுழைந்து
தமிழால் இசை பாடிய
...
13
Nov
முதல் ஒலி 76
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-11-2025
ஐரோப்பிய முதல் தமிழ் ஒலியே
அகிலமெங்கும் அலை ஓசை
உலகமெங்கும் கலைஞரை...
12
Nov
முதல் ஒலி
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
புலம்பெயர் மண்ணினிடத்திலே
கண் அயராத தமிழ் மொழியில்
வலம் வந்ததிலே வாசமுடனே
பூத்துக் குலுங்கிய நேசமுடன்
மக்கள்...
“அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே”
கவி இல(132) 09/05/24
பத்து மாத பந்தம் -கருவறையில்
காத்து வளர்த்த சொந்தம்
தொப்புள் கொடியுறவு
அறுந்திடுமோ என்றும்
அன்பைச் சொரிந்தாய்
வலி தாங்கி ஈன்றெடுத்தாய்
பாலமுது ஊட்டிடவே- பக்குவமாய்
பத்தியமும் காத்தாயே
கண்ணுறக்கம் தொலைத்தாய் -நான்
கண்ணுறங்க நீ தாலாட்டினாய் -என்
வளர்ச்சியிலே இன்பம் கண்டாய்
உயர்ச்சியிலே திண்ணம் கொண்டாய்
பள்ளியில் விட்டுத் தள்ளி நின்றாய் –
நான் துள்ளி வர அள்ளிக் கொண்டாய்
தடுக்கி விழு முன்னே
பதறி வந்து தூக்கிடுவாய்
அம்மா உன் அன்புக்கு
எல்லை தான் ஏது உண்டு
எனக்கென்று எல்லாம் செய்தாய்
உனக்கென்று நான் என்ன செய்தேன்.?
யுகம் பல கடந்தாலும் -நான்
உன் முகம் மறந்திலேன் அம்மா!!!!
நன்றி வணக்கம்.
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...