கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

“அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே”

கவி இல(132) 09/05/24

பத்து மாத பந்தம் -கருவறையில்
காத்து வளர்த்த சொந்தம்
தொப்புள் கொடியுறவு
அறுந்திடுமோ என்றும்

அன்பைச் சொரிந்தாய்
வலி தாங்கி ஈன்றெடுத்தாய்
பாலமுது ஊட்டிடவே- பக்குவமாய்
பத்தியமும் காத்தாயே

கண்ணுறக்கம் தொலைத்தாய் -நான்
கண்ணுறங்க நீ தாலாட்டினாய் -என்
வளர்ச்சியிலே இன்பம் கண்டாய்
உயர்ச்சியிலே திண்ணம் கொண்டாய்

பள்ளியில் விட்டுத் தள்ளி நின்றாய் –
நான் துள்ளி வர அள்ளிக் கொண்டாய்
தடுக்கி விழு முன்னே
பதறி வந்து தூக்கிடுவாய்

அம்மா உன் அன்புக்கு
எல்லை தான் ஏது உண்டு
எனக்கென்று எல்லாம் செய்தாய்
உனக்கென்று நான் என்ன செய்தேன்.?
யுகம் பல கடந்தாலும் -நான்
உன் முகம் மறந்திலேன் அம்மா!!!!

நன்றி வணக்கம்.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading