தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே!

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே!

அன்னைக்கு நிகர் அன்னையேதான்
பின்னைக்கும் புதுமைக்கும் பெருமையன்றோ!
புதுமைக்கு பெருமை புனிதம் நிறைத்தவள்
வதுவையாய் வாழ்வுக்கு வழி சொல்பவள்

கருவறையில் உயிர் தந்தவள்
காலமெல்லாம் காப்பவள்
கண்ணிமைக்கும் நேரமெல்லாம்
கனவிலும் பிள்ளையை சுமப்பவள்

உண்ணமறுக்கும் நேரமெல்லாம்
உணவூட்டி மகிழ்பவள்
உள்ளன்போடு சேயை காக்கும்
உணர்வு கொண்டவள் அம்மா!

அம்மா என்றால் ஆசை நெஞ்சில்
சும்மா சொல்லிட முடியுமா?
சுகமும் அவளே! சுந்தரமும் அவளே!
இகமும் அவளே! இன்னமுதும் அவளே!

நகுலா சிவநாதன் 1761

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

Continue reading