அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே!

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே!

அன்னைக்கு நிகர் அன்னையேதான்
பின்னைக்கும் புதுமைக்கும் பெருமையன்றோ!
புதுமைக்கு பெருமை புனிதம் நிறைத்தவள்
வதுவையாய் வாழ்வுக்கு வழி சொல்பவள்

கருவறையில் உயிர் தந்தவள்
காலமெல்லாம் காப்பவள்
கண்ணிமைக்கும் நேரமெல்லாம்
கனவிலும் பிள்ளையை சுமப்பவள்

உண்ணமறுக்கும் நேரமெல்லாம்
உணவூட்டி மகிழ்பவள்
உள்ளன்போடு சேயை காக்கும்
உணர்வு கொண்டவள் அம்மா!

அம்மா என்றால் ஆசை நெஞ்சில்
சும்மா சொல்லிட முடியுமா?
சுகமும் அவளே! சுந்தரமும் அவளே!
இகமும் அவளே! இன்னமுதும் அவளே!

நகுலா சிவநாதன் 1761

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading