” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே!

அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே!

அன்னைக்கு நிகர் அன்னையேதான்
பின்னைக்கும் புதுமைக்கும் பெருமையன்றோ!
புதுமைக்கு பெருமை புனிதம் நிறைத்தவள்
வதுவையாய் வாழ்வுக்கு வழி சொல்பவள்

கருவறையில் உயிர் தந்தவள்
காலமெல்லாம் காப்பவள்
கண்ணிமைக்கும் நேரமெல்லாம்
கனவிலும் பிள்ளையை சுமப்பவள்

உண்ணமறுக்கும் நேரமெல்லாம்
உணவூட்டி மகிழ்பவள்
உள்ளன்போடு சேயை காக்கும்
உணர்வு கொண்டவள் அம்மா!

அம்மா என்றால் ஆசை நெஞ்சில்
சும்மா சொல்லிட முடியுமா?
சுகமும் அவளே! சுந்தரமும் அவளே!
இகமும் அவளே! இன்னமுதும் அவளே!

நகுலா சிவநாதன் 1761

Nada Mohan
Author: Nada Mohan