அன்னை திரேசா பிறப்பு நாள் -1913 ஜெயா.நடேசன் ——————– அன்னை திரேசா ஆவணி 26ல் அவதரித்தார் அன்னையவர் மனிதாபிமானத்தின் வடிவம் அம்மையார் மக்களின் இதயத்தை தொட்டவர் இரப்போர்க்கு இரக்கத்தை காட்டினவர் வீடு வீடாக ஏறி கதவுகளை தட்டினவர் இல்லாதவர்க்கு இரங்குங்கள் கரம் நீட்டினவர் ஏழைகளை அணையுங்கள் பகிருங்கள் என்றவர் உண்மைகளை உரைத்து அன்பாக கேட்டவர் உத்தமியாய் வாழ்ந்து அனைத்தையும் வென்றவர் ஆதரவற்ற குழந்தைகளை அன்போடு அணைத்தவர் வறுமையில் பசித்தோருக்கு உணவு அளித்தவர் வாழ்க்கையே மக்களுக்காக அர்ப்பணித்து மறைந்தவர்அன்னை திரேசா பிறப்பு நாள் -1913 ஜெயா.நடேசன் –

——————–
அன்னை திரேசா ஆவணி 26ல் அவதரித்தார்
அன்னையவர் மனிதாபிமானத்தின் வடிவம்
அம்மையார் மக்களின் இதயத்தை தொட்டவர்
இரப்போர்க்கு இரக்கத்தை காட்டினவர்
வீடு வீடாக ஏறி கதவுகளை தட்டினவர்
இல்லாதவர்க்கு இரங்குங்கள் கரம் நீட்டினவர்
ஏழைகளை அணையுங்கள் பகிருங்கள் என்றவர்
உண்மைகளை உரைத்து அன்பாக கேட்டவர்
உத்தமியாய் வாழ்ந்து அனைத்தையும் வென்றவர்
ஆதரவற்ற குழந்தைகளை அன்போடு அணைத்தவர்
வறுமையில் பசித்தோருக்கு உணவு அளித்தவர்
வாழ்க்கையே மக்களுக்காக அர்ப்பணித்து மறைந்தவர்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading