அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -161
கவித் தலைப்பு !

“இரத்தம் கொதிக்குதடா”

கூட்டிற்குள் அடைப்பட்ட கூண்டு கிளியல்ல
நாட்டிற்க்காய் உயிர்ஈந்த நற்றமிழ் உறவுகளே /

நடைபிணமாய் வாழ்ந்தாலும்
நட்புறவோ தாய்நாடே
தடைகள் பலகண்ட தன்நிகரில்லா என்நாடே/

வீரமறத் தமிழன் விளைந்தமண் முத்துகளே
சாரதி மனவலிமை சார்ந்த சொத்துக்களே/

வாழப்பிறந்த மனிதரல்ல வஞ்சக நெஞ்சறுத்து
ஆழப்பிறந்த தமிழனடா ஆதித்தமிழ்
மைந்தனடா/

மடிந்தே வீழ்ந்தாலும் மடிஎன்றன் தாய்மண்ணே
படிந்த வடுக்கள் புதைந்த இதயங்கள்/

இறுதிமூச்சுக் காற்றின் இதயஅறை நான்கும்
உறுதிகொள்ளும் சுவாசிக்க உள்நாட்டு தென்றலென/

எத்துணை இன்னல்கள் எதிர்க்கும்வ லிமையுண்டு
இத்தரணி காலம்வரை ஈழத்தமிழ் உறவுண்டு /

வார்த்திடும் தலைமுறை வரலாற்று சுவடுகள்
வார்த்தைகள் உதிர்க்காது வந்தனம் சமர்ப்பணம்/

நன்றி வணக்கம்🙏

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading