சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -161
கவித் தலைப்பு !

“இரத்தம் கொதிக்குதடா”

கூட்டிற்குள் அடைப்பட்ட கூண்டு கிளியல்ல
நாட்டிற்க்காய் உயிர்ஈந்த நற்றமிழ் உறவுகளே /

நடைபிணமாய் வாழ்ந்தாலும்
நட்புறவோ தாய்நாடே
தடைகள் பலகண்ட தன்நிகரில்லா என்நாடே/

வீரமறத் தமிழன் விளைந்தமண் முத்துகளே
சாரதி மனவலிமை சார்ந்த சொத்துக்களே/

வாழப்பிறந்த மனிதரல்ல வஞ்சக நெஞ்சறுத்து
ஆழப்பிறந்த தமிழனடா ஆதித்தமிழ்
மைந்தனடா/

மடிந்தே வீழ்ந்தாலும் மடிஎன்றன் தாய்மண்ணே
படிந்த வடுக்கள் புதைந்த இதயங்கள்/

இறுதிமூச்சுக் காற்றின் இதயஅறை நான்கும்
உறுதிகொள்ளும் சுவாசிக்க உள்நாட்டு தென்றலென/

எத்துணை இன்னல்கள் எதிர்க்கும்வ லிமையுண்டு
இத்தரணி காலம்வரை ஈழத்தமிழ் உறவுண்டு /

வார்த்திடும் தலைமுறை வரலாற்று சுவடுகள்
வார்த்தைகள் உதிர்க்காது வந்தனம் சமர்ப்பணம்/

நன்றி வணக்கம்🙏

Nada Mohan
Author: Nada Mohan