வரமாகும் வாய்ப்புகளே 87

வரமாகும் வாய்ப்புகளே 87 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-02-2026 வரமாகும் வாய்ப்புகளே -இந்த வாய்ப்பெனும் விதையைப் பயிராக்கி வியர்வையை...

Continue reading

அருட்கொடையே

நகுலா சிவநாதன்

அருட்கொடையே

பெய்யும் மழையே புவிமேலே
பயிர்கள் வளரப் பொழிகின்றாய்
உய்யும் உயிர்கள் உய்த்திடவே
உணர்வாய் நீயும் பெய்கின்றாய்
கையும் காலும் ஓய்வின்றி
கமமும் செய்யும் விவசாயி
பையும் நிறைய அறுவடையைக்
பாரே கொடுக்க அருளிடுக!

வானம் அருளும் அருட்கொடையே
வளமும் செழிப்பும் பொற்பயிர்ற்கு
தானம் கொடுக்கும் தளிரேநீ
தாரம் வாழ வாழ்த்திடுவாய்
மானம் காக்கும் முறைப்பெண்ணும்
மகிழ்ந்து நிற்பாள் உயர்வுடனே
கானம் பாடும் வையகமுமே
காதல் மொழியை உரைத்துநிற்கும்

நகுலா சிவநாதன்1764

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

Continue reading