அறிவாலயம் அனலாதே..

வசந்தா ஜெகதீசன்

அறிவாலயம் அனலானதே
…. காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின் கணக்கிலே
தமிழரின் அறிவகம்
அரிச்சுவடி நூலகம்
பூண்டோடு அழிப்பதற்காய்
புத்தியற்றுச் சிதைப்பதற்காய்
தமிழினத்து வரலாற்றை
தகர்த்திட துணிந்தனர்
ஆகுதிக்கு இரையாக்கி
அறிவற்ற ஜிவிகளாய்
ஆதாரமற்ற தமிழர்களாய்
நிலைகுன்ற வைப்பதற்கு
அனலிட்டு அழித்தனர்
ஆதாரமின்றியே பொசுக்கினார்
தமிழரினம் துடித்தது
வெந்தணலின் வேதனையில்
வெந்தே வீறுகொண்டோம்
மீளமைப்பில் மிடுக்கானோம்
அன்று வைத்த தீ
இன்றும் எரி நெருப்பே
அகத்தின் குன்றிலே
அகலாத பெருந்தவிப்பே.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading