தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

இன்று பாரதி இங்கிருந்தால்…

வசந்தா ஜெகதீசன்
இன்று பாரதி இருந்திருந்தால்…
புதுக்கவியாளன் பாரதியே
படைத்தெழு படைப்பே பாரெங்கும்
முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்
முழு
மனத்தாக்கத்தை கவியாக்கும்
காலத்தின் கண்ணாடி கருப்பொருளாய்
கவிஞரின் குமுறல்கள் எரிமலையாய்
வீறுகொண்டெழு வீச்சுக்கவி
விதைத்திடும் விதைப்புகள் தனித்துவமாய்
வென்றுயர் படைப்புகள் சான்றுகளாய்
பாரதி காண் கனவினை
புதுயுகமாகியே பூத்து நிற்கும்
வேடிக்கை மனிதர்
விழிப்புறவே
விண்ணே அதிர்ந்திட குரல் முழங்கும்
பெண்ணின விடுதலை முழங்கியவன்
இன்று பாரதி இங்கிருந்தால்
நன்றே கனவு மெய்படுதல்
கண்டே களித்து வியப்புறுவான்.
நன்றி
மிக்க நன்றி

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading