இன்று பாரதி இங்கிருந்தால்…

வசந்தா ஜெகதீசன்
இன்று பாரதி இருந்திருந்தால்…
புதுக்கவியாளன் பாரதியே
படைத்தெழு படைப்பே பாரெங்கும்
முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்
முழு
மனத்தாக்கத்தை கவியாக்கும்
காலத்தின் கண்ணாடி கருப்பொருளாய்
கவிஞரின் குமுறல்கள் எரிமலையாய்
வீறுகொண்டெழு வீச்சுக்கவி
விதைத்திடும் விதைப்புகள் தனித்துவமாய்
வென்றுயர் படைப்புகள் சான்றுகளாய்
பாரதி காண் கனவினை
புதுயுகமாகியே பூத்து நிற்கும்
வேடிக்கை மனிதர்
விழிப்புறவே
விண்ணே அதிர்ந்திட குரல் முழங்கும்
பெண்ணின விடுதலை முழங்கியவன்
இன்று பாரதி இங்கிருந்தால்
நன்றே கனவு மெய்படுதல்
கண்டே களித்து வியப்புறுவான்.
நன்றி
மிக்க நன்றி

Author:

வசந்தா ஜெகதீசன் இன்று பாரதி இருந்திருந்தால்... புதுக்கவியாளன் பாரதியே படைத்தெழு படைப்பே பாரெங்கும் முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...

Continue reading